Published : 19 Sep 2019 08:52 AM
Last Updated : 19 Sep 2019 08:52 AM

நில உடமை பதிவேடான மின் அடங்கல் இல்லாததால் விவசாயிகளுக்கு கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் மறுப்பு: தமிழகம் முழுவதும் பயிர் சாகுபடி பணிகள் முடங்கும் அபாயம்

டி.செல்வகுமார்

சென்னை

மின் அடங்கல் இல்லாததால் விவசாயக் கடன் வழங்க தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மறுத்து வருகின்றன. இதனால் தமிழ்நாடு முழுவதும் பயிர் சாகுபடி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேட்டூர் அணை நிரம்பி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்திருப்பதால், பயிர் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில், வருவாய்த் துறையின் மின் அடங்கல் (நில உடமை பதி வேடு) இல்லாததால், விவசாயி களுக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் பயிர்க் கடன் வழங்க மறுக்கின்றன.

இதனிடையே இணையதளம் மூலம் மின் அடங்கல் வழங்குவதற் காக இ-அடங்கல் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. ஆனால், மாநில முழுவதும் மின் அடங்கல் வழங்கப்படவில்லை. இதனால், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற முடியாமலும் பயிர் சாகுபடிப் பணிகளை தொடர முடியாமலும் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

தமிழகத்தில் 1984-ம் ஆண்டுக் குப் பிறகு நில உடமை பதிவு இன்றுவரை புதுப்பிக்கப்பட வில்லை. இத்தனை ஆண்டுகளில் பல நில உடமையாளர்கள் மாறியுள் ளனர். நில உடமைப் பதிவைப் புதுப்பிக்காதவரை மின்அடங்கல் வழங்குவது சாத்தியமில்லை. இதை காரணம்காட்டி பயிர்க் கடன் தரமுடியாது என்று கூட்டுறவு வங்கிகள் கைவிரித்தால், தமிழகம் முழுவதும் பயிர் சாகுபடி முற்றிலு மாக முடங்கும்.

மேலும் கிஸான் கிரெடிட் கார்டு, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம், ஓய்வூதி யத் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களைப் பெற முடியவில்லை. எனவே, மின் அடங் கல் வழங்கும் பணியை அரசு விரைவுபடுத்த வேண்டும். அது வரை விஏஓ வழங்கும் அடங்கலைக் கொண்டு கடன் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: பயிர்க்கடன் விண் ணப்பத்துடன் உத்தேச அடங்கலுக் குப் பதிலாக, விவசாயிகள் பயிர் செய்யும் பயிர் வகை, பயிர் செய்யப் பட்டுள்ள பரப்பளவு ஆகியவற்றை மின் அடங்கல் மூலம் சரிபார்த்து கடன் வழங்க வேண்டும்" என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் கையாலோ அல்லது தட்டச்சு செய்தோ வழங்கப்படும் சான்றுகள் செல்லாது என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் மின் அடங்கல் இல்லாததால், கடன்பெற முடிய வில்லை. திண்டுக்கல் உட்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதி களிலும் இதே நிலைதான். இவ் வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “வருவாய் துறையில் பல பணியிடங்கள் குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால், அனைத்து விவசாயிகளுக்கும் மின் அடங்கல் வழங்க முடியாத நிலை நீடிக்கிறது.

இதன் காரணமாக கடன்பெற முடியாத நிலை பற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு செல் வோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x