Published : 18 Sep 2019 09:26 AM
Last Updated : 18 Sep 2019 09:26 AM

தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க யாராலும் முடியாது: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உறுதி

நாகப்பட்டினம்

தமிழகத்தில் இந்தியைத் திணிக்க யாராலும் முடியாது என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச் சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

நாகை அவுரித்திடலில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அதிமுக சார்பில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் இந்தியைத் திணிக்க யாராலும் முடியாது. அந்த அளவுக்கு உறுதியுடன் அதிமுக இருக்கிறது. அண்ணாவின் பெயரில் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்த அதிமுக ஆட்சி, ஒரு போதும் இந்தித் திணிப்பை ஏற்காது. தமிழகத்தில் ஒருபோதும் இந்தி திணிப்புக்கு சாத்தியம் இல்லை என்றார்.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிய போது, “அதிமுகவில் யார் வேண்டு மானாலும் தலைமைப் பதவிக்கு வர முடியும். ஆனால் திமுகவில் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தான் வரமுடியும். சாதாரண திமுக தொண்டரால் ஒருபோதும் முதல்வராக முடியாது” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x