Published : 17 Sep 2019 02:52 PM
Last Updated : 17 Sep 2019 02:52 PM

ஆரோக்கியமான வாழ்க்கைக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறோம்: மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நாராயணசாமி, கிரண்பேடி

சென்னை

பிரதமர் மோடி இன்று (செப்.17) தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். மோடிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோரும் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாட்டு மக்களுக்கு சேவை செய்ய நல்ல உடல் நலத்துடன் பிரதமர் இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நாட்டு மக்களுக்கு சேவை செய்ய நல்ல உடல் நலத்துடன் பிரதமர் இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனவும் பதிவிட்டுள்ளார்

அதேபோன்று, கிரண்பேடி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளதாவது:

"நாட்டுக்கு அதிகபட்சமாக சேவை செய்ய உங்களுக்கு உதவும் வகையில் கடவுள் உங்களை சிறந்த ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியரின் செழிப்புக்காக உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் வளர்த்த உங்கள் எல்லா அபிலாஷைகளையும் நிறைவேற்ற வேண்டும். உங்கள் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம் .உங்கள் தலைமைத்துவ குணங்களுக்காக முழு உலகமும் உங்களை கவனிக்கிறது.

நீங்கள் இன்று உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு ஒரு உத்வேகம்," என பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x