Published : 17 Sep 2019 11:54 AM
Last Updated : 17 Sep 2019 11:54 AM

பெரியாரின் பிறந்தநாள்: முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை

சென்னை

பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் சென்னையில் மரியாதை செலுத்தினர்.

பெரியாரின் 141-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை, அண்ணா சாலை அருகே உள்ள ஜெமினி மேம்பாலத்துக்கு அடியி உள்ள பெரியாரின் திருவுருவப் படத்துக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முதல்வர், துணை முதல்வருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் தலைமைச் செயலாளர் சண்முகம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

பெரியாரின் தொண்டுகளைப் போற்றும்விதமாக அவரின் பிறந்தநாள், ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சென்னையைப் போலவே தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளின் சார்பில் பெரியாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x