Published : 17 Sep 2019 11:32 AM
Last Updated : 17 Sep 2019 11:32 AM
டிகல்லுப்பட்டி
அண்ணாவை மறந்து திமுக குடும்பக் கட்சியாக மாறிவிட்டதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். முன்னாள் முதல்வர் அண்ணாவின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் டி.கல்லுப்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியது:
தேசியக் கட்சிகள் மாநிலங் களை ஆண்டபோது, மாநில கட்சி களால் ஆட்சியை பிடிக்க முடியும் என உலகுக்கு உணர்த்தியவர் அண்ணா. அவரது பிறந்த நாளை அதிமுகவினர் தங்கள் குடும்ப விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆனால், திமுக. அண்ணாவையே மறந்து ஒரு குடும்ப கட்சியாக மாறிவிட்டது.
வாரிசு இல்லாமலேயே தலை முறை, தலைமுறையாக மக்கள் பணியை ஒரு இயக்கத்தால் செய்ய முடியும் என்பதை அதிமுக நிரூபித்துள்ளது. முதல்வராக பழனிசாமி பதவியேற்றபோது, இந்த அரசு 2 நாட்கள் கூட தாங் காது என்று கூறியவர்கள் மத்தி யில், தொடர்ந்து திறமையாக ஆட்சி நடத்தி வருகிறார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொய் தகவல்களை அறிக்கை யாக வெளியிட்டு வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT