Published : 17 Sep 2019 07:30 AM
Last Updated : 17 Sep 2019 07:30 AM

இலங்கை - தமிழகம் இடையே விரைவில் படகு போக்குவரத்து: இலங்கை அமைச்சர் தகவல்

சென்னை

இலங்கை - தமிழகம் இடையே படகு போக்குவரத்து சேவை தொடங்குவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக முன்னேற்றத் துறை அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென் னையில் நேற்று செய்தியாளர் களிடம் கூறியது: ஜனாதிபதி தேர்தல் நவ. 23 அல்லது நவ. 29-ல் நடக்க வாய்ப்புள்ளது. இதற் கான அதிகாரப்பூர்வமான அறி விப்பை இலங்கை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும்.

இந்தத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே தலைமையிலான லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதி பதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்த பய ராஜபக்சேவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் கூட்டணியான ஐக் கிய தேசியக் கட்சி சார்பில் போட்டி யிடும் வேட்பாளர் பெயரை, தேர்தல் தேதி அறிவித்த பின் னர் நாங்கள் அறிவிப்போம். 2015-ம் ஆண்டு பிறகு இலங்கை யில் தமிழர்கள் வாழும்பகுதி யில் அரசியல் பயங்கரவாதம் இல்லை. அங்குள்ள மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற் கொண்டு வருகிறோம். தமிழர் களின் கட்சிகள் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.

இலங்கை - இந்தியாவுடனான நட்பு முக்கியமானது. இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கிறது. நாங்களும் இந்தியாவுடன் வளர வேண்டு மென விரும்புகிறோம். தூத்துக் குடி - கொழும்பு, தலைமன்னார் - ராமேஸ்வரம் இடையே படகுப் போக்குவரத்து சேவை தொடங்குவது குறித்து இருநாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இலங்கையில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து பாதுகாப்பு துறை அதி காரிகளிடமும் விசாரணை நடத் தப்பட்டு வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x