Published : 11 Jul 2015 08:49 AM
Last Updated : 11 Jul 2015 08:49 AM

கல்பாக்கத்தில் அதிவிரைவு அணு உலைகள் மூலம் 500 மெகா வாட் மின்னுற்பத்தி செப்டம்பரில் சோதனை ஓட்டம் தொடங்கும்

கல்பாக்கத்தில் அதிவிரைவு அணு உலைகள் மூலம் 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படவுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக கல்பாக்கம் வளாகத்தில் இருக்கும் பாவினி மையத்தின் தலைவர் பி.செல்ல பாண்டி கூறியதாவது:

அணு மின்னுற்பத்தியின் அடுத்தகட்ட வளர்ச்சிதான் அதி விரைவு அணு மின்னுற்பத்தி. இங்குள்ள மையத்தில் இது தொடர்பாக கடந்த 30 ஆண்டு களாக ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆய்வு முடிவு களின் அடிப்படையில் 500 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட அதிவிரைவு அணு உலை அமைக்கும் பணிகள் தொடங் கப்பட்டு, கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. உலகிலேயே ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இவ்வளவு பெரிய அதிவிரைவு அணு உலையை அமைத்த பெருமை இந்தியாவையே சாரும்.

இதற்கான எரிபொருட்களை வெளியில் இருந்து கொண்டுவரத் தேவையில்லை. ஏற்கெனவே அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருட்களை 2-வது கட்ட மாக இந்த அதிவிரைவு அணு உலைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். புதிதாக அமைக் கப்பட்டுள்ள அதிவிரைவு அணு உலையில் வரும் செப்டம்பர் மாதத்தில் முதல்கட்ட சோதனையோட்டம் நடக்கவுள்ளது. தொடர்ந்து 6 மாதங்களுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படும். பிறகு மக்களின் பயன்பாட்டுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x