Published : 16 Sep 2019 01:44 PM
Last Updated : 16 Sep 2019 01:44 PM

ஸ்டாலின் விளம்பரத்திற்காக பேசுகிறார்; இருமொழிக் கொள்கையிலிருந்து தமிழகம் மாறாது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளம்பரத்திற்காகப் பேசுகிறார் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (செப்.16) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"தமிழ் எங்கும் எதிலும் ஒலித்திட பல்வேறு சாதனைகளைப் புரிந்தது அதிமுக அரசு. இதனை வரலாறு பேசும். இந்த வரலாற்றை யாராலும் மறைத்துவிட முடியாது. விளம்பரத்திற்காக ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார். தமிழுக்காக நாங்கள் 100 சதவீதம் பணி செய்தால், திமுக 10 சதவீத பணியைத்தான் மேற்கொண்டிருக்கும். 10 சதவீதத்தை செய்துவிட்டு, தமிழுக்கு நல்லது செய்திருக்கிறோம் என திமுக சொன்னால், மக்கள் அதனை நம்பத் தயாராக இல்லை," என அமைச்சர் தெரிவித்தார்.

இதையடுத்து, சமஸ்கிருதத்தை விட தமிழ் மூத்த மொழி எனக்கூறிய பிரதமர் மோடியை தமிழக மக்கள் ஆண்டு முழுவதும் கொண்டாடியிருக்க வேண்டும் எனவும், ஆனால், தமிழக மக்கள் நன்றி மறந்தவர்கள் வேண்டும் எனவும் முன்னாள் மத்திய இணையமைச்சர் கூறிய கருத்துக் குறித்து, அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான். அந்தக் கொள்கையிலிருந்து தமிழகம் எப்போதும் மாறாது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட இருமொழிக் கொள்கை, இன்றும் அதிமுக ஆட்சியால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது," என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x