Published : 16 Sep 2019 09:45 AM
Last Updated : 16 Sep 2019 09:45 AM

53 நாட்கள் பரோல் முடிந்து சிறைக்கு திரும்பினார் நளினி

வேலூர் 

வேலூரில் 53 நாட்கள் பரோலுக்கு பிறகு நளினி மீண்டும் சிறைக்கு திரும்பினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மகள் ஹரித்ரா என்ற மேகராவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற் காக நளினிக்கு சென்னை உயர் நீதிமன்றம் 30 நாட்கள் பரோலில் செல்ல அனுமதி வழங்கியது.

அதன்படி, கடந்த ஜூலை 25-ம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி, வேலூர் சத்துவாச்சாரி புல வர் நகரில் தங்கினார். அவருக்கு கூடுதலாக 3 வாரங்கள் பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில், பரோல் காலம் முடிந்ததை அடுத்து, போலீஸார் நளினியை நேற்று மாலை 4 மணியளவில் வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x