Published : 15 Sep 2019 11:10 AM
Last Updated : 15 Sep 2019 11:10 AM
வேலூர்
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடல்நலக் குறைவால் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வேலூர் வந்தார்.
அவருடன் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனு சாமி மற்றும் வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் வந்தனர். வேலூர் தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள பி.எச்.பாண்டியனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பிறகு பி.எச்.பாண்டியனுக்கு அளிக்கப்பட்டுவரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர் களிடம் துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் கேட்டறிந்தார். பிறகு அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார். இதய சிகிச்சைக்காக பி.எச்.பாண்டியன் கடந்த 10-ம் தேதி அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரி வித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT