தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:

வட தமிழக பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட் டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், விருதுநகர், ராமநாத புரம், புதுக்கோட்டை, திருவண் ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, சேலம், கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், சிவ கங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

மேலும் வங்கக் கடலில் உருவாகும் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வட தமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளதால், அதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in