Published : 14 Sep 2019 07:46 AM
Last Updated : 14 Sep 2019 07:46 AM

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 25-ம் தேதி முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம்: வங்கி அதிகாரிகள் சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

சென்னை

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தல், ஊதிய திருத்தத்தை உடனடியாக வழங்குவது என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி அதிகாரிகள் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

அண்மையில் பொதுத்துறை வங்கிகளை இணைக்கப் போவ தாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு வங்கி அதிகாரிகள் சங்கங் கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளன. மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து, வரும் 25-ம் தேதி நள்ளிரவு முதல் 27-ம் தேதி நள்ளிரவு வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய் துள்ளன.

அத்துடன், வங்கிகளுக்கு வாரத்துக்கு 5 நாட்கள் வேலை நாளாக மாற்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும். பணப் பரிவர்த்தனை நேரத்தைக் குறைக்க வேண்டும். தேவையான அளவுக்கு பணியாளர்களை நிய மிக்க வேண்டும். புதிய ஓய்வூதி யத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத்தை அமல் படுத்த வேண்டும். வாடிக்கையா ளர்களுக்கான சேவைக் கட்ட ணத்தைக் குறைக்க வேண்டும் உள் ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத் தியும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், வங்கி அதிகாரிகளின் தேசிய அமைப்பு உள்ளிட்ட நான்கு சங்கங்கள் சார்பில் இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x