Published : 13 Sep 2019 07:47 AM
Last Updated : 13 Sep 2019 07:47 AM

புவி காந்தவியல் ஈர்ப்பு கருவி உதவியுடன் கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யும் பணி தொடக்கம்

இ.ஜெகநாதன்

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் திருப் புவனம் அருகே கீழடியில் புவி காந்தவியல் ஈர்ப்புக் கருவி மூலம் 6-ம் கட்ட அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது.

கீழடியில் 2015-ல் மத்திய தொல் லியல் துறை அகழாய்வு மேற் கொண்டது. இதில் கிடைத்த தொல்பொருட்களை பரிசோதித்த தில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வை நடத் தியது. 3 அகழாய்வு மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டன. 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற் கொண்டதில் 5,820 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், இரும்புப் பொருட்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை, தண்ணீர் ஜக், சூதுபவளம், எழுத்தாணி உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் இதுவரை கிடைத்துள்ளன. மேலும் அதிக அளவில் இரட்டை, வட்டச் சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகளும் கிடைத்துள் ளன. இப்பணி இம்மாத இறுதியில் முடிவடைகிறது.

இந்நிலையில் 6-ம் கட்ட அக ழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடை பெறும் என அரசு அறிவித்துள்ளது. கீழடியில் புவி காந்தவியல் ஈர்ப்புக் கருவி மூலம் 6-ம் கட்ட அகழாய்வுக்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. மும்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஜியோமேக்னடிசம் (ஐஐஜி) நிறுவனத்தைச் சேர்ந்த 3 தொல்லி யல் ஆய்வாளர்கள் இப்பணியை மேற்கொண்டனர்.

புவி காந்தவியல் ஈர்ப்புக் கருவி மூலம் பூமிக்கடியில் எந்தெந்த இடங்களில் தொல்பொருட்கள் இருக்கின்றன என்பதை துல்லிய மாகக் கண்டறிய முடியும். இதன் மூலம் சரியான இடத்தைத் தேர்வு செய்து அகழாய்வை தொடங்க முடியும் என தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x