Published : 09 Sep 2019 10:00 AM
Last Updated : 09 Sep 2019 10:00 AM

மனைவி இறந்த சோகத்தில் கணவர் உயிரிழப்பு: குமாரபாளையம் அருகே கிராமத்தில் சோகம்

நாமக்கல்

மனைவி இறந்த துக்கம் தாளாத கணவர், மனைவி இறந்த 2 மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் குமாரபாளையம் சுற்றுவட்டார கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குமாரபாளையம் அருகே தேவூர் வட்ராம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (79). இவரது மனைவி பழனியம்மாள் (71). இவர்களுக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர். அனை வருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். குப்புசாமி, பழனி யம்மாள் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்த பழனியம்மாள், நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் உயிரிழந்தார். மனைவி இறந்த சோகம் தாளாத குப்புசாமி, மனைவி இறந்த 2 மணி நேரத்தில் மாலை 6 மணியளவில் அவரது உயிரும் பிரிந்தது. இதையறிந்த உறவினர்கள் சோகத்தில் கதறி அழுதனர்.

இதையடுத்து இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினர். வாழும் காலம் முழுவதும் இணைந்திருந்த குப்புசாமி, பழனியம்மாள் தம்பதி, ஒன்றாக இறந்தது அவர்களது மகன், மகள் உள்ளிட்ட குடும்பத்தினரை மட்டுமின்றி கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x