Published : 09 Sep 2019 09:54 AM
Last Updated : 09 Sep 2019 09:54 AM

செங்கல்பட்டு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி: 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு நவம்பர் 17-ல் சென்னையில் திருமணம்

சுயம்வரம் நிகழ்சியில் தேர்வு செய்யப்பட்டவர்களை அனைவரும் வாழ்த்தினர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம் வரம் நிகழ்ச்சியில், வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்த 3 ஜோடி கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு சென்னையில் நவ. 17-ம் தேதி திருமணம் நடை பெறுகிறது.

சென்னையில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறன் மகளிர் வாழ் வுரிமை அமைப்பு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழ்ச்சி நேற்று செங்கல்பட்டில் நடைபெற்றது.

இந்த அமைப்பின் தலைவர் லலிதா அம்பிகை தலைமையில் முன்னாள் இந்திய குடியரசுத் தலை வர் ஆர்.வெங்கட்ராமனின் மகள் பத்மா வெங்கட்ராமன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தனர்.

இதில் 120 மாற்றுத்திறனாளிகள் உட்பட 350 பேர் பங்கேற்றனர். இதில் பெண் மாற்றுத்திறனாளி ஒருவரை மாற்றுத்திறனாளி அல் லாத ஒருவர் திருமணம் செய்ய முன்வந்தார். இதேபோல் ஆண் மாற்றுத்திறனாளி ஒருவரை மாற் றுத்திறனாளி அல்லாத ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள முன் வந்தார். மேலும் பெண் மாற்றுத் திறனாளி ஒருவரை, இன்னொரு ஆண் மாற்றுத்திறனாளி திரு மணம் செய்துகொள்வதாக தெரி வித்தார். இந்த நிகழ்ச்சியில் 3 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

சுயம்வரம் நிகழ்ச்சியில் மாற் றுத் திறனாளிகளை திருமணம் செய்வதற்கு முன்வந்த மாற்றுத் திறனாளி அல்லாதவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் கள் பாராட்டுத் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் நாத், அனைத்து வகை மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப் பின் மாநில நிர்வாகிகள் மகேஸ் வரி, அருணாதேவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அமைப்பின் மாநில தலைவர் லலிதா அம்பிகை கூறிய தாவது: தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த 3 ஜோடிகளைப் போல் தமிழகம் முழுவதும் மாற்றுத் திற னாளிகளுக்கு சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி மொத்தம் 100-க்கும் மேற் பட்ட ஜோடிகளுக்கு இலவசமாக வருகிற நவ. 17-ந்தேதி சென்னை யில் திருமணம் நடைபெற உள் ளது. முன்னதாக தேர்வு செய்யப் பட்ட ஜோடிகளுக்கு அடுத்த மாதம் கவுன்சிலிங் நடைபெறும். அதில் உடல் பரிசோதனை, வருவாய்த் துறையினர் மற்றும் மாற்றுத்திற னாளி அலுவலர்களின் சான்றுகள் சரிபார்க்கப்படும். பின்னர் தேர்வு செய்யப்பட்ட ஜோடிகளுக்கு கீதா பவுன் அறக்கட்டளை சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பில் சீர்வரிசை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x