Published : 09 Sep 2019 08:25 AM
Last Updated : 09 Sep 2019 08:25 AM

திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் இறங்கிய பேருந்து: பெண்கள் உட்பட 20 பேர் படுகாயம்

திருவாரூர்

திருவாரூர் அருகே வாய்க்காலுக்குள் தனியார் பேருந்து இறங்கி விபத்துக்கு உள்ளானதில் பெண்கள் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத் தில் இருந்து மாவூர் வழியாக திருவாரூ ருக்கு நேற்று காலை தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பெண்கள் உட்பட 28 பயணிகள் இருந்தனர்.

திருநாட்டியத்தான்குடி என்ற இடத்தில் எதிரே வந்த லாரிக்கு வழிவிட முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த வாய்க்காலுக்குள் இறங்கியது. இதில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள் உள்ளிட்ட 20 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் மக்கள் திரண்டனர். 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாய்க்காலில் சிறிதளவே தண்ணீர் இருந்ததால் பெரிய அளவில் அசம்பாவி தம் நடைபெறாமல் தடுக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து வடபாதிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x