Published : 06 Sep 2019 11:15 AM
Last Updated : 06 Sep 2019 11:15 AM

திமுக இளைஞரணி கூட்டத்தில் ‘அட்டென்டென்ஸ்’ எடுத்த பொன்முடி

விழுப்புரம்

விழுப்புரம் கலைஞர் அறிவால யத்தில் நேற்று மாலை விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக இளை ஞரணி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் செ.தினகரன் வரவேற்றார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சேகர், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் கௌதம சிகாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் முன்வரிசையில் அமர்ந்திருந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளை பின் வரிசைக்கு செல்லுமாறும், இளைஞரணி பொறுப்பாளர்கள் முன்வரிசைக்கு வருமாறும் பொன்முடி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விழுப் புரம் நகரில் உள்ள 42 வார்டு களில் நியமிக்கப்பட்ட பொறுப் பாளர்களை எழுந்து நிற்க சொன்னார்.

மிகவும் சொற்பமான பொறுப் பாளர்களே எழுந்து நின்றதால் ஆத்திரமடைந்த பொன்முடி, கூட்டத்திற்கு வராத நகர இளைஞரணி செயலாளர் ராஜாவை நீக்கி விட்டு மணிகண்டன் என்பவரை நியமித்தார். பின்னர் கோலியனூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளை எழுந்து நிற்க சொன்ன பொன்முடி, சட்டென பத்திரிக்கையாளர்களை பார்த்து, 'நீங்கள் வெளியேறலாம்!' என்று கூறி, 'நான் இப்படி சொன்னதையும் எழுதுங்கள்' என்று மைக்கில் சொன்னார். அரங்கை விட்டு வெளியே வரும்போது பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி என்றும் சொன்னார்.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்திற்கு, மாவட்ட திமுகவின் அழைப்பின் பேரிலேயே பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்கச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x