Published : 06 Sep 2019 11:13 AM
Last Updated : 06 Sep 2019 11:13 AM
கடலூர்
ஆசிரியர் தினமான நேற்று கடலூரில் உள்ள உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு ஆசிரியர் மதுபோதையில் பள்ளிக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் அரசு உதவிபெறும் செயின்ட் ஜோசப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தாமஸ் என்ற ஆசிரியர் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
நேற்று வகுப்பிற்கு சென்ற ஆசிரியர் தாமஸ் மதுபோதையில் தள்ளாடியபடி வந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனே பள்ளி தலைமை ஆசிரியர் அருள்நாதனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் அருள்நாதன் கடலூர் புதுநகர் போலீஸாருக்கு தகவல் தந்தார். பள்ளிக்கு சென்ற போலீஸார் மதுபோதையில் இருந்த ஆசிரியர் தாமஸை அழைத்து சென்றனர்.
ஆசிரியர் தினமான நேற்று மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத் தர வேண்டிய ஆசிரியர் மதுபோதையில் பள்ளிக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT