Published : 06 Sep 2019 08:22 AM
Last Updated : 06 Sep 2019 08:22 AM

காய்ச்சல் ஏற்பட்டால் அரசு, மாநகராட்சி மருத்துவமனைகளை அணுக வேண்டும்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தல்

சென்னை

எந்தவிதமான காய்ச்சல் ஏற்பட் டாலும் மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவமனைகளை உடனே அணுகி சிகிச்சைப் பெற வேண்டும் என்று மாணவியருக்கு ஆணையர் கோ.பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில் அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முறையாக கை கழுவுவது குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. அதில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பங்கேற்று, மாணவியருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

ஏடீஸ் கொசு பற்றி விளக்கம்

இதைத் தொடர்ந்து, முறையாக சோப்பு உபயோகித்து 20 விநாடிகள் கை கழுவுவதன் மூலம் எவ்வாறு தொற்று நோய் வராமல் தடுக்க முடியும் என்பது குறித்து வழங்கப்பட்ட செயல்முறை விளக் கத்தை பார்வையிட்டார்.

மேலும் டெங்கு காய்ச்சல் பரப்ப காரணமாக இருக்கும் ஏடீஸ் வகை கொசுவின் வாழ்க்கை சுழற்சி, உருவாகும் விதம், பரப்பும் நோய்கள், அதன் அறிகுறிகள் குறித்து விளக்கப்பட்டன.

பின்னர் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பேசியதாவது:

மழைநீர் தேங்கும் வகையிலான உபயோகமற்ற பொருட்கள் டெங்கு கொசு உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக உள்ளன. அதனால் அத்தகைய பொருட்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்தால் அவற்றை உடனே அகற்ற வேண்டும். மழை காலங்களில் எத்தகைய காய்ச்சல் ஏற்பட்டாலும் உடனே மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சைப் பெற வேண் டும்.

மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்து சீட்டு இல்லாமல் நேரடி யாக எந்த மாத்திரையையும் உட் கொள்ள வேண்டாம். இதுகுறித்து தங்கள் பெற்றோருக்கு மாணவி கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) ப.மது சூதன் ரெட்டி, மத்திய வட்டார துணை ஆணையர் பி.என்.தரன், மாநகர நல அலுவலர் என்.ஏ.செந் தில்குமார், சுகாதார கல்வி அலு வலர் டி.ஜி.சீனிவாசன், மண்டல அலுவலர் கே.பி.விஜயகுமார், மண்டல சுகாதார அலுவலர் ராஜ் குமார், பள்ளி தலைமை ஆசிரியை என்.சின்ன வெள்ளைத்தாய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x