Published : 04 Sep 2019 09:02 AM
Last Updated : 04 Sep 2019 09:02 AM
சென்னை
நீதிமன்ற உத்தரவின்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் 7,728 அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும், பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த தடை எதுவும் இல்லை. எனவே, அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இதையடுத்து ஆசிரியர்கள், பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை பதிவேட்டில் தவறாமல் பதிவு செய்து பராமரிக்கவும், அவற்றை எமிஸ் இணையத்தில் பதிவேற்றவும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையின் அறிவுறுத்தல்படி சொத்து விவரங்களில் தவறு செய்துள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆசிரியர்களின் பதவி உயர்வு செயல்முறை முழுவதும் தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் நடக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT