மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் 6 பேருக்கு தானம்

மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் 6 பேருக்கு தானம்

Published on

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்தவரின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் தானமாக வழங்கப்பட்டதால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

சென்னை போரூர் மதனந்தபுரம் பகுதியில் வசித்தவர் பிரேம்குமார் (42). பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 16-ம் தேதி சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் நேற்று அதிகாலை மூளைச்சாவு அடைந்தார்.

அவரது உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் முன்வந்தனர். இதையடுத்து, அவரது உடலில் இருந்து இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் அகற்றப்பட்டன. அடையாறு ஃபோர்ட்டிஸ் மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு அவரது இதயமும், பள்ளிக்கரணையை சேர்ந்த 66 வயது பெண் நோயாளிக்கு கல்லீரலும் பொருத்தப் பட்டன. ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மனை மற்றும் குளோபல் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் 2 பேருக்கு அவரது 2 சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டன. 2 கண்களை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்த டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in