Published : 02 Sep 2019 10:00 AM
Last Updated : 02 Sep 2019 10:00 AM

உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனைக்கு தங்கம்

ரியோடி டி ஜெனிரோ: உலக துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை யஷஸ்வினி சிங் தேஸ்வால் தங்கம் வென்றார்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை யஷஸ்வினி 236.7 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்றார்.

இதே பிரிவில் உக்ரைன் வீராங்கனை ஒலேனா கோஸ்டெவிச் வெள்ளியும், செர்பியா வீராங்கனை ஜாஸ்மினா மிலாவோனோவிக் வெண்கலமும் வென்றனர். 22 வயதான யஷஸ்வினி துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முன்னாள் ஜூனியர் உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, இளவேனில் வாலறிவன் ஆகியோர் ஏற்கெனவே தங்கம் வென்றுள்ளனர். இந்தப் போட்டியில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து யஷஸ்வினி, 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். ஏற்கெனவே இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத், அஞ்சும் மவுத்கில், அபூர்வி சாண்டேலா, அபிஷேக் வர்மா, திவ்யன்ஷ் சிங் பன்வார், ராஹி சமோபத், மனு பாகெர் ஆகியோரும் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x