Published : 01 Sep 2019 02:34 PM
Last Updated : 01 Sep 2019 02:34 PM

தமிழிசைக்கு ஆளுநர் பதவி மிகவும் பொருத்தம்: கே.எஸ்.அழகிரி வாழ்த்து

சென்னை,

தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி அளித்திருப்பது மிகவும் பொருத்தமாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''தமிழக பாஜக தலைவராகப் பணியாற்றி வந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதற்காக அவரை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். கொள்கை ரீதியாக கடுமையான கருத்து வேறுபாடுகளுக்கு இடையில் கருத்து மோதல்களை மிகுந்த நாகரிகத்தோடு நடத்தியவர் தமிழிசை சவுந்தரராஜன். அவருக்கு ஆளுநர் பதவி அளித்திருப்பது மிகவும் பொருத்தமாகும்'' என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புதுடெல்லியில் ராஷ்டிரபதி பவனில் சில மாநிலங்களுக்கான ஆளுநர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தெலங்கானா, கேரளா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டார். அதில் தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழிசைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x