Published : 07 Jul 2015 07:27 AM
Last Updated : 07 Jul 2015 07:27 AM
செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே உள்ள அரசு சிறுவர் இல்லத்தில் இருந்த 17 சிறுவர்கள் நேற்று முன்தினம் மதியம் ஜன்னல் வழியாக தப்பிசென்றனர். இதில், 2 சிறுவர்களை ஆத்தூர் அருகே போலீஸார் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுவர் இல்லத்தை வடக்கு மண் டல ஐஜி மஞ்சுநாத் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல் பட்டு ரயில் நிலையம் அருகே அர சினர் சிறுவர்களுக்கான இல்லம் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் செயல் பட்டு வரும் இந்த சிறுவர் இல்லத்தில், 27 சிறுவர்கள் தங்கவைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், சிறுவர்கள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 17 இளம் சிறுவர்கள், அறையில் இருந்த இரும்பு ஜன்னலை உடைத்து, துணிகளைக் கயிறாகப் பயன் படுத்தி நேற்று முன்தினம் மதியம் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து, சிறப்பு இல்ல கண்காணிப்பாளர் அளித்த தகவலின்பேரில், செங்கல் பட்டு தாலுகா போலீஸார், செங்கல்பட்டு ஏஎஸ்பி ஜார்ஜீ ஜார்ஜ் சிறுவர் இல்லத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார். மேலும், தப்பிச் சென்ற சிறுவர்களைப் பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் ஆத்தூர் வாழை தோட்டத்தில் பதுங்கியிருந்த இரண்டு சிறுவர்களை போலீஸார் மடக்கி பிடித்தனர். மற்ற சிறுவர் களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாத் சிறார்கள் இல்லத்தை நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தப்பிச் சென்ற சிறுவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக போலீஸாரிடம் ஆலோசனை செய்தார். தொடர்ந்து, சிறுவர்கள் இல்லத்தை பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறுவர்கள் தப்பி சென்ற பகுதிகளின் விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக நலத் துறையின் கீழ் சிறுவர்கள் இல்லம் செயல்படுவதால், போலீஸார் தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தில் செயல்பட முடி யாது. எனினும், பதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை யினரிடம் பரிந்துரைப்பது மற்றும் ஆலோசனை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT