

அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரத்தினம்(64). இவரது இளைய மகன் ர.வீரமணி(32) கடந்த 10 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். மனைவி ரீனாதேவி சென்னை ஆவடி யில் துப்பாக்கித் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், டெல்லி தலைமை யிடத்து ராணுவத்தில் பணியாற்றிவந்த வீரமணி, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, பாதுகாப்பு பணிக்காக ஜம்மு- காஷ்மீருக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். இவ்வாறு பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்களில் சில வீரர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டனர்.
அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில், வீரமணி உயிரிழந்தது தெரியவந்தது. மீட்கப்பட்ட அவரது உடல், டெல்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை டெல்லிக்கு சென்ற அவரது உறவினர்கள், இறந்தது வீரமணிதான் என்பதை உறுதி செய்தனர்.
இந்நிலையில், ராணு வத்திலிருந்து தடை யின்மை சான்று வழங்க தாமதம் செய்வதாகவும், உடலில் அதிக காயங்கள் உள்ளதால் விமானத்தில் அனுப்பிவைக்க முடியாது என ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது. ஆம்பு லன்ஸ் மூலமாகவே உடல் ஜெயங்கொண்டத் துக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிப்பதாக குடும்பத்தினர், தங்களது உற வினர்களிடம் செல்போனில் தெரிவித்துள்ளனர்.
இதையறிந்த, வீரமணியின் உறவினர்கள் விமானம் மூலம் உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம் போலீஸார் பேச்சுவாரத்தை நடத்தி, உடல் இங்கு வர 2 நாட்கள் ஆகும் எனத் தெரிவித்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.