Published : 31 Aug 2019 08:19 AM
Last Updated : 31 Aug 2019 08:19 AM

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாடு காரணம்?- கொச்சியில் கோவை இளைஞர்கள் 2 பேரிடம் என்ஐஏ விசாரணை

கோவை

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாடு விவகாரம் தொடர்பாக, கோவை இளைஞர்கள் இருவரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கொச்சியில் உள்ள அலுவலகத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஏராள மானோர் உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய ஜஹ்ரான் ஹாசிம் என்பவருடன், முகநூல் சமூக வலைதளம் மூலம் தொடர்பு வைத்திருந்ததாகவும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகச் செயல் பட்டு, ஆட்கள் மற்றும் நிதி திரட்டி யதாகவும் உக்கடம் அன்பு நகரை சேர்ந்த முகமது அசாருதீன்(32), தடை செய்யப்பட்ட சிமி அமைப் புடன் தொடர்பு வைத்திருந்ததாக உக்கடம் குழந்தை கவுண்டர் வீதியை சேர்ந்த ஷேக் இதாயத் துல்லா(37) ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர்.

முகமது அசாருதீன், ஷேக் இதாயத்துல்லாவுடன் முகநூல் மற்றும் செல்போன் மூலம் தொடர்பு வைத்திருந்ததாகவும், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் பல்வேறு கருத்துகளையும், வீடியோக்களை யும் பகிர்ந்து வருவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் கோவையில் நேற்று முன்தினம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 5 இடங்களில் சோதனை நடத்தினர்.

கோவையை சேர்ந்த உமர் பாரூக்(32), ஷனாபர் அலி(24), ஷமேஷா முபின்(27), முகமது யாசிர்(26), சதாம் உசேன் (27) ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய் துள்ளனர். இவர்களில், முகமது யாசிர், சதாம் உசேன் ஆகியோரை நேற்று கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பினர். அதன் பேரில் இருவரும் நேற்று காலை ஆஜராகினர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதாக உளவுப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

‘‘ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது, யாரா வது தூண்டுகோலாக செயல் பட்டனரா, முகமது அசாருதீன், ஷேக் இதாயத்துல்லா ஆகியோ ருடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது, முகநூல் மூலம் ஆட்களை திரட்டினீர்களா, நிதி திரட்டினீர்களா, வேறு யார், யார் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள னர், இலங்கை குண்டு வெடிப்பு தீவிரவாதி ஜஹ்ரான் ஹாசிம் என்பவருடன் முகநூல் மூலம் அறிமுகம் உள்ளதா என்பது போன்றவை குறித்து என்ஐஏ அதிகாரிகள் 2 பேரிடமும் விசாரித்துள்ளனர்.

அவர்கள் தெரிவித்த தகவல் களை எழுத்துப்பூர்வமாகவும் அதிகாரிகள் பதிவு செய்துள்ள தாகத் தெரி கிறது. இருவரிடமும் விசாரணை மேலும் சில நாட்கள் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப் படுகிறது.இலங்கை குண்டு வெடிப்பு தீவிரவாதி ஜஹ்ரான் ஹாசிமுடன் முகநூல் மூலம் அறிமுகம் உள்ளதா என்பது குறித்தும் என்ஐஏ அதிகாரிகள் 2 பேரிடமும் விசாரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x