Published : 29 Aug 2019 04:55 PM
Last Updated : 29 Aug 2019 04:55 PM

கோவையில் என்ஐஏ சோதனை: ஏராளமான ஆவணங்கள் பறிமுதல்

கோவை 

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாடு தொடர்பாக கோவையில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களில் தொடர்புடைய ஜஹ்ரான் ஹாசிம் என்பவருடன், கோவையைச் சேர்ந்த சில இளைஞர்கள் முகநூல் சமூக வலைதளம் மூலம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள், கடந்த ஜூன் மாதம் கோவையில் 6 பேருக்கு சொந்த மான 7 இடங்களில் சோதனை நடத்தினர். இதன் இறுதியில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதர வாக செயல்பட்டு, ஆட்கள் மற்றும் நிதி திரட்டியதாக உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த முகமது அசாரு தீன்(32), தடை செய்யப்பட்ட சிமி அமைப்புடன் தொடர்பு வைத் திருந்த உக்கடம் குழந்தை கவுண் டர் வீதியைச் சேர்ந்த ஷேக் இதாயத்துல்லா(37) ஆகிய இருவரை என்ஐஏ அதிகாரிகள் அடுத்தடுத்து கைது செய்தனர்.

முகமது அசாருதீன், ஷேக் இதாயத்துல்லா உள்ளிட்டோருடன் கோவை மாநகரைச் சேர்ந்த 5 இளைஞர்கள் முகநூல், செல்போன் மூலம் தொடர்பு வைத்துக் கொண்டு, ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் பல்வேறு கருத்து களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவதாக என்ஐஏ அதி காரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உக் கடம் ஜி.எம் நகரைச் சேர்ந்த உமர் பாரூக்(32), வின்சென்ட் சாலையைச் சேர்ந்த ஷனாபர் அலி(24), வின்சென்ட் சாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஷமேஷா முபின்(27), பிலால் எஸ்டேட்டைச் சேர்ந்த முகமது யாசிர்(26), ஜி.எம்.நகர் பள்ளி வீதியைச் சேர்ந்த சதாம் உசேன்(27) ஆகியோரின் செயல்பாடுகளை என்ஐஏ அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். மேற்கண்ட 5 பேருக்கும் சம்மன் அனுப்பி கொச்சின் அலுவலகத்துக்கு வர வழைத்து கடந்த ஜூன் மாதம் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, உமர் பாரூக், ஷனாபர் அலி, ஷமேஷா முபின், முகமது யாசிர், சதாம் உசேன் ஆகியோரது வீடுகளில் டிஎஸ்பி விக்ரம் தலைமையில் என்ஐஏ அதிகாரிகள் 5 குழுக் களாக பிரிந்து நேற்று அதிரடி சோதனை நடத்தினர். காலை 5.30 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரை இந்த சோதனை நடந்தது. இதில், உமர் பாரூக் சரக்கு ஆட்டோ ஓட்டுநராகவும், ஷனாபர் அலி, தியாகி குமரன் மார்க்கெட் டில் காய்கறி கடையில் விற்பனை யாளராகவும், ஷமேஷா முபின் மற்றும் சதாம் உசேன் ஆகியோர் புத்தக விற்பனை நிலையத்திலும், முகமதுயாசின் நாட்டு மருந்து விற்பனை நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர். இதில் சிலர் மீது முன்னரே குற்ற வழக்குகள் உள்ளன. இந்த சோதனைக்கு பின்னர், 5 பேரையும் ரேஸ்கோர்ஸில் உள்ள தங்களது கிளை அலுவலகத்துக்கு அழைத்து வந்து என்ஐஏ. அதிகாரி கள் விசாரணை நடத்தினர். நேற்று காலை 11.30 மணி முதல் மாலை வரை இந்த விசாரணை நடந்தது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது எப்படி ஆர்வம் வந்தது, அந்த அமைப்பு தொடர்பாக யார், யாரிடம் பேசி வந்துள்ளீர்கள், கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், ஷேக் இதாயத்துல்லா ஆகியோருடன் தொடர்பு எப்படி ஏற்பட்டது, இலங்கை குண்டு வெடிப்பு வழக்கு முக்கிய குற்ற வாளியுடன் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாகவும், வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவ ணங்கள் தொடர்பாகவும் அவர் களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர்.

நீண்ட விசாரணைக்கு பின்னர், நேற்று இரவு 7.30 மணிக்கு 5 பேரை யும் என்.ஐ.ஏ அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அதில், சதாம் உசேன், முகமது யாசிர் ஆகியோரை கொச்சி னில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத் துக்கு இன்று (30-ம் தேதி) நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளனர்.

ஆவணங்கள் பறிமுதல்

இந்த சோதனை தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ‘‘எர்ணாகுளத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத் தில் பெறப்பட்ட வாரண்ட் அடிப் படையில் சோதனை நடத்தப்பட்டது. 5 இடங்களில் நடந்த சோதனையில் ஒரு லேப்டாப், 5 செல்போன்கள், 4 சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டு, 8 சிடி, டிவிடிக்கள், துண்டு அறிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x