Last Updated : 28 Aug, 2019 05:45 PM

 

Published : 28 Aug 2019 05:45 PM
Last Updated : 28 Aug 2019 05:45 PM

மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்

நாமக்கல்

பள்ளிக்கு மதுபோதையில் வந்த அரசுப் பள்ளி ஆசிரியரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

திருச்செங்கோடு வரகூராம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்முத்துக்குமார் (47). இவர் ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 26-ம் தேதி அதிக மதுபோதையில் ஆசிரியர் செந்தில்முத்துக்குமார் பள்ளிக்கு வந்துள்ளார்.

இதையறிந்த பள்ளி தலைமையாசிரியர் மாதேஸ்வரன், அவர் மீது ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஆசிரியர் செந்தில்முத்துக்குமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பின் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

இதனிடையே பள்ளிக்கு மதுபோதையில் வந்த ஆசிரியர் செந்தில்முத்துக்குமாரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x