Published : 27 Aug 2019 07:09 AM
Last Updated : 27 Aug 2019 07:09 AM

இரண்டு வழித்தடங்களிலும் 5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு 

சென்னை

சென்னையில் தற்போது இயக்கப் படும் 2 வழித்தடங்களில் அலுவலக நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்சேவை என்ற வகையில் காலஅட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வசதியாக பல்வேறு குடியிருப்பு மற்றும் பேருந்து நிலையங்கள் வழியாக ஷேர்ஆட்டோ, ஷேர் டாக்ஸி, மாநகர சிறிய பேருந்துகள், மற்றும் சிறிய வகை வேன்கள் இயக்கப்படுகின்றன.

இதனால், மெட்ரோ ரயில் தின சரி பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதற்கிடையே, பயணிகள் எண் ணிக்கையை மேலும் அதிகரிக் கும் வகையில் மெட்ரோ ரயில் களை இயக்க காலஅட்டவணை யில் மாற்றம் செய்து அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த புதிய காலஅட்ட வணை நேற்று முதல் அமலாகி யுள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் வண்ணா ரப்பேட்டையில் இருந்து அண்ணா சாலை வழியாக சென்னை விமான நிலையம் செல்லும் தடத்தில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

இதேபோல், சென்னை சென்ட் ரலில் இருந்து கோயம்பேடு வழி யாக விமான நிலையம் செல்லும் தடத்தில் அலுவலக நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். இருப்பினும், ஆலந்தூர் - கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் தடத்தில் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

வண்ணாரப்பேட்டை - விமான நிலையத்துக்கு அலுவலக நேரமல்லாத மற்ற நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்சேவையும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலைக்கு 14 நிமி டங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சேவையும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x