Published : 26 Aug 2019 09:23 AM
Last Updated : 26 Aug 2019 09:23 AM

ஓட்டுநர்களிடையே தொடரும் ‘டைமிங்’ பிரச்சினை: அரசு பேருந்து சிறைப்பிடிப்பால் பயணிகள் அவதி 

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்குவதில் பிரச்சினை ஏற்பட்டதால் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கோவைக்கு இயக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரப் பிரச்சினையில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநரை தாக்கியதாக தனியார் பேருந்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை 11.15 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு செல்ல தனியார் பேருந்து தயார் நிலையில் இருந்தபோது, அந்த பேருந்துக்கு வழிவிடாமல், கோவை செல்லும் அரசுப் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றியதாகக் கூறி, 20-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அரசுப் பேருந்து முன்பு அமர்ந்து, சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ‘பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்குவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையே உள்ள பிரச்சினைக்கு விரைவில் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும், பயணிகளுக்கு இடையூறு இன்றி கலைந்து செல்லுங்கள்’ என்ற தனியார் பேருந்து ஓட்டுநர்களை அறிவுறுத்தினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் 30 நிமிடங்கள் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் பேருந்துகள் வெளியே செல்ல முடியாததால் பயணிகள் சிரமமடைந்தனர்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x