Published : 19 Jul 2015 11:11 AM
Last Updated : 19 Jul 2015 11:11 AM

கோவையில் கைதான 5 மாவோயிஸ்ட் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது

கோவையில் கைதான மாவோயிஸ்ட்கள் ஐந்து பேரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், கருமத் தம்பட்டி பகுதியில் கடந்த மே 4-ம் தேதி ரூபேஷ் (46), இவரது மனைவி சைனா (42), கண்ணன் (46), அனுப் (31), வீரமணி (60) ஆகிய 5 மாவோயிஸ்ட்களை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநில எல்லைகளில் உள்ள வனப் பகுதிகளில் அர சால் தடை செய்யப்பட்ட மாவோ யிஸ்ட் இயக்கச் செயல்பாடு களை வளர்ப்பதற்காகவும், தாக்கு தல்களுக்கு திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம், தேச துரோக குற்றம் உள்ளிட்ட சட்டப் பிரிவு களின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 15-ம் தேதி கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத் தில் இந்த 5 பேரும் ஆஜர்படுத் தப்பட்டனர். விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 5 பேரையும் கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். தேசிய பாதுகாப் புச் சட்டத்தின் கீழ் கைது செய் வதற்கான உத்தரவு 5 பேரிடம் நேற்று முன்தினம் வழங்கப் பட்டது.

அறிவுரைக் குழுமம்

குற்றம் சாட்டப்பட்டுவர்களின் தரப்பு வழக்கறிஞர் சா.பாலமுரு கன் கூறும்போது, ‘ஏற்கெனவே ஐந்து பேரும் கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர். தடுப்புக் காவல் சட்டங்களில் அவர்களை கைது செய்வது அவசியமற்றது. தேசிய பாதுகாப்புச் சட்டங்கள் தமிழகத் தில் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றன. இதை, ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய அறிவுரைக் குழுமத்திடமும், அடுத்ததாக உயர் நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்ல முடிவு செய் துள்ளோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x