Published : 24 Aug 2019 02:19 PM
Last Updated : 24 Aug 2019 02:19 PM
கோவை
தீவிரவாதிகள் ஊடுருவல் தகவலை தொடர்ந்து கோவையில் 2 வது நாளாக இன்றும் போலீஸாரின் வாகன சோதனை, கண்காணிப்பு, தேடுதல் பணி தொடர்கிறது.
கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் இன்று காலை கணியூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனை நடத்தப்பட்டது.
இதுவரை சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரும் பிடிபடவில்லை என போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT