Published : 24 Aug 2019 09:07 AM
Last Updated : 24 Aug 2019 09:07 AM

கடந்த 16 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை; சர்க்கரை ஆலை ஊழியர்களை பணிக்கு வரவேண்டாம் என அறிவித்ததால் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்

திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையில் பணியாற் றிய ஊழியர்கள் யாரும் இனி பணிக்கு வர வேண்டாம் என திடீ ரென அறிவித்ததால் சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் திருஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, ஆலை ஊழியர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த ஜூலை மாதம் வரை ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், நேற்று காலை சர்க்கரை ஆலையின் நுழைவு வாயிலில் "ஆலையின் நிதிநிலை சரியில்லாத காரணத்தால் பணி யாளர்களில் 11 பேர் மட்டும் பணிக்கு வந்தால் போதும். வேறு யாரும் பணிக்கு வர வேண்டாம்" என அறிவிப்புப் பலகையில் ஆலை நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டது.

இதை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று காலை ஐஎன்டியுசி தொழிற் சங்கத் தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் பொதுச் செயலாளர் கணேசமூர்த்தி, பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் முன் னிலையில் ஆலையின் நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், ஊழியர்களிடம் ஆலை யின் மேலாளர் கார்முகிலன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, ஆர்ப்பாட் டத்தை முடித்துக் கொண்ட னர்.

இதுகுறித்து கணேசமூர்த்தி கூறியபோது, "திருமண்டங்குடி சர்க்கரை ஆலையில் தொழி லாளர்கள் மற்றும் பணியாளர் களாக 287 பேர் பணியாற்றி வந் தோம். எங்களுக்கு கடந்த 16 மாதமாக ஊதியம் வழங்கவில்லை. ஆலையின் நிதிநிலை சரியில்லை, விரைவில் சீராகும் எனக் கூறினா். அதை ஏற்று தினமும் ஆலைக்கு பணிக்கு சென்று வந்தோம்.

இந்நிலையில், இன்று (நேற்று) காலை பணிக்கு வந்தபோது பாதுகாவலர்கள் ஆலைக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். காரணம் கேட்டபோது, பணியாளர் கள் யாரும் பணிக்கு வர வேண்டாம் என அறிவிப்புப் பலகையில் ஒட்டப் பட்டுள்ளது என தெரிவித்தனர்.

எனவே, ஆலை நிர்வாகம் தொடர்ந்து எங்களுக்கு வேலை யும், ஊதியமும் வழங்க வேண் டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x