Published : 22 Aug 2019 06:54 AM
Last Updated : 22 Aug 2019 06:54 AM

சென்னையில் மேகமூட்டம் காணப்படும்; தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு: 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

சென்னை

சென்னைக்கும் நாகப்பட்டினத்துக் கும் இடையே வளிமண்டல மேலடுக்கில் காற்றின் சங்கமம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியதாவது:

சென்னைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே வளிமண்டல மேலடுக்கில் காற்றின் சங்கமம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த இரண்டு
நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மேலும் திருவள்ளூர், காஞ்சி
புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்து வரும் சில தினங்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை
பெய்யக்கூடும். மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையில் காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதன் பின்னர் முழுமையாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்சம் 7 செ.மீ.

புதன்கிழமை காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர், அரியலூர், கடலூர் மாவட்டம் தொழுதூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளம், விருதுநகர், நாமக்கல் மாவட்டம் திருச்
செங்கோடு ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., சிவகங்கை மாவட்டம் திருபுவனம், மதுரை மாவட்டம் சோழவந்தான், அரியலூர் மாவட்
டம் ஜெயங்கொண்டம், நீலகிரி மாவட்டம் தேவாலா ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x