Published : 21 Aug 2019 08:36 AM
Last Updated : 21 Aug 2019 08:36 AM

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.1,093 கோடி: குறுகியகால கடனாக தமிழக அரசு ஒதுக்கீடு 

சென்னை

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பணப் பலன்களை வழங்குவதற் காக அரசு போக்குவரத்துக் கழகங் களுக்கு குறுகிய காலக்கடனாக தமிழக அரசு ரூ.1,093 கோடியை வழங்கியுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகங் களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள் ளிட்ட தொழிலாளர்களுக்கான பணப்பலன்களை வழங்குவது தொடர்பாக அவ்வப்போது போராட் டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை கருத்தில்கொண்டு, அரசு சார்பில் முன்பணம் மற்றும் குறுகிய கால கடன்கள் வழங்கப்பட்டு, அந்த தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் வரையில் ஓய்வு பெற்றவர்களுக் கான பணப்பலன்கள் வழங்கப் பட்டுள்ளன.

இந்நிலையில், அரசு போக்கு வரத்துக் கழகங்களில் பணியாற்று வோருக்கு பணப்பலன்களை வழங்க, 2019-20-ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளில் ரூ.1,093 கோடி ஒதுக்கி நிதித்துறை யில் கடந்த ஜூலை 31-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் போக்கு வரத்துத் துறை சார்பில் நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையில் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்காக, அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் ரூ.1,093 கோடியை குறுகியகால கடனாக வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.125.55 கோடி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத் துக்கு ரூ.63.38 கோடி, அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் - ரூ.130.26 கோடி, சேலம் - ரூ.123.63 கோடி, கோவை - ரூ.164,79 கோடி, கும்பகோணம்- ரூ.219.80 கோடி, மதுரை- ரூ.165.66 கோடி, நெல்லை - ரூ.99.93 கோடி என ரூ.1093 கோடி பிரித்து அளிக்கப்படுகிறது.

இதில், ஈட்டிய விடுப்புக்காக ரூ.133 கோடியே 25 லட்சம், பணிக்கொடை- ரூ.457 கோடி, வருங்கால வைப்பு நிதி- ரூ.282 கோடியே 97 லட்சம், ஓய்வூதியத்தை தொகுத்து பெறுதல் ரூ.207 கோடியே 8 லட்சம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரூ.12 கோடியே 70 லட்சம் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த தொகையை ஓய்வு பெற்றவர் களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். வேறு எந்த பயன் பாட்டுக்கும் திருப்பிவிடக்கூடாது.

இதில் ஏதேனும் மீறல்கள் இருந்தால் அவை தீவிரமாக கருத்தில் கொள்ளப்படும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x