Published : 20 Aug 2019 09:51 AM
Last Updated : 20 Aug 2019 09:51 AM
தஞ்சாவூர்
ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் விரும்பினாலும், திமுக எம்எல்ஏக்கள் விரும்பவில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்ட அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் பொதுமக்களை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டேன் எனக் கூறியவர் ஜெயலலிதா. அதைச் செய்தும் காட்டினார். அந்த உறுதி இப்போது தலைகீழாக மாறிவிட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பினால்கூட, இந்த ஆட்சியைக் கலைப்பதற்கு திமுக எம்எல்ஏக்கள் விரும்பமாட்டார்கள். தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதேசமயம், சோர்வடையக் கூடாது. தமிழ்நாட்டைப் பாது காக்கும் போராட்டத்தில் அமமுக நிச்சயம் வெற்றி பெறும். வருங்காலத்தில் வெற்றிகளைக் குவிப்போம். நாம் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலை நோக்கிச் செயல்பட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், அமமுக துணைத் தலைவர் அன்பழகன், துணைப் பொதுச் செயலர் எம்.ரெங்கசாமி, தலைமை நிலையச் செயலாளர் ஆர்.மனோ கரன், கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT