Published : 20 Aug 2019 08:02 AM
Last Updated : 20 Aug 2019 08:02 AM
சேலம்
மேட்டூர் அணை நீர் மட்டம் 115.43 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த வாரங்க ளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகபட்சமாக விநாடிக்கு 2.53 லட்சம் கனஅடி வந்தது. இதனால், கடந்த 13-ம் தேதி அணையின் நீர்மட் டம் 100 அடியை எட்டியது. பின்னர் மழை குறைந்ததைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்தது.
இந்நிலையில், நேற்று முன் தினம் காலை அணை நீர் மட்டம் 113.45 அடி, நீர்வரத்து விநாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 33 ஆயிரம் கனஅடியாகவும், நீர் மட்டம் 114.85 அடியாகவும், நீர் இருப்பு 85.49 டிஎம்சியாகவும் இருந்தது.
பகல் 12 மணிக்கு விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இரவு 8 மணி அளவில் 30 ஆயிரம் கனஅடியானது. நீர் இருப்பு 86.36 டிஎம்சி-யாக இருந் தது. டெல்டா பாசனத்துக்கு விநா டிக்கு 10 ஆயிரம் கனஅடியும், கால் வாய் பாசனத்துக்கு 500 கனஅடி யும் நீர் திறக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT