கீழடியில் அகழாய்வுப் பணி திடீர் நிறுத்தம்: மழைநீர் தேங்கியதால் பழங்காலச் சுவர்கள் சேதம்

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் தொழிலாளர்கள்.
கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் தொழிலாளர்கள்.
Updated on
1 min read

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளுக்குள் மழைநீர் புகுந்ததால் சுவர்கள் சேதமடைந்தன. மேலும் அகழாய்வுப் பணியும் திடீரென நிறுத்தப்பட்டது.

கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற் கொண்டது. இதில் ஆயிரக்கணக் கான தொல்பொருட்கள் கண்டெ டுக்கப்பட்டன. இவற்றை பரி சோதனை செய்ததில் 2,500 ஆண்டு கள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது தெரியவந் தது. தொடர்ந்து மத்திய தொல் லியல்துறை 2-ம் கட்ட மற்றும் 3-ம் கட்ட அகழாய்வை மேற்கொண் டது. அதன்பின் தமிழக தொல்லி யல்துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 13-ம் தேதி தொடங்கியது.

இந்த அகழாய்வு தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவ னாந்தம் தலைமையில் நடைபெறு கிறது. இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங் களில் 27 குழிகள் தோண்டப் பட்டுள்ளன. இதுவரை மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறை கிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை உட் பட 700-க்கும் மேற்பட்ட பொருட் கள் கிடைத்துள்ளன. இந்த அக ழாய்வில் அதிக அளவில் சுவர்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், அப்பகுதியில் 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. குழிகள் தார்ப்பாய் மூலம் மூடியிருந்தும் மழைநீர் புகுந்தது. இதில் சுவர்கள் சேதமடைந்தன. தொடர்ந்து அகழாய்வு பணி நிறுத்தப்பட்டது.

இதை அறிந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே குழிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in