Published : 19 Aug 2019 10:56 AM
Last Updated : 19 Aug 2019 10:56 AM

இந்திய அரசியலில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் தனிமைப்படுத்தப்படும்: தமிழிசை

கடலூர்

இந்திய அரசியலில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் தனிமைப்படுத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கடலூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் விடும் சவால் சில்லித்தனமானது. மேடையில் ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் பேசுவாரா? இந்திய அரசியலில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் தனிமைப்படுத்தப்படும்.

காஷ்மீர் நமக்கு சொந்த மில்லை என்று தமிழகத்தில் சொல்லிக்கொண்டு இருக்கும் கட்சிகள் நமக்கு தேவையா? என இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். நூறாவது சுதந்திர தினத்தின் போது காஷ்மீர் நம்மோடு இருக்காது என வைகோ வக்கிரப் புத்தியோடு பேசுகிறார். நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தனியாக தான் வைகோ நடைப்பயணம் செல்ல முடியும். நல்ல திட்டங்களை புறக்கணிப்பதே அவரது வேலை.அவர் தனிமைப் படுத்தப்படுவார்.

பால் விலை உயர்வை ஒரே அடியாக உயர்த்தி இருப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சிறுக, சிறுக உயர்த்தலாம். சத்துணவுடன் வாழைப்பழம், பால் வழங்கலாம் என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x