Published : 19 Aug 2019 10:51 AM
Last Updated : 19 Aug 2019 10:51 AM

எரிக்கப்பட்ட கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: மனைவி தற்கொலை முயற்சி 

துடியலூர்

கோவை அருகே மனைவியால் எரிக்கப்பட்ட கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து மனைவி, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

துடியலூர் அருகேயுள்ள சோமைய னூர் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் முருகேசன். டர்னர். இவரது மனைவி சுமதி(45). கடந்த பிப்ரவரி மாதம், மது போதையில் வீட்டுக்கு வந்த முருகேசன் மனைவி சுமதியுடன் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திர மடைந்த சுமதி, முருகேசன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத் தார். முருகேசன் கோவை அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துடியலூர் காவல்துறையினர், சுமதி மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

கடந்த 4 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த முருகேசன், சமீபத்தில் வீட்டுக்கு திரும்பினார். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் முருகேசனுக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதனால் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முருகேசன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதனால் மனமுடைந்த சுமதி துக்கம் தாங்காமல் நேற்று முன்தினம் தூக்க மாத்திரை தின்று மயங்கினார். குடும்பத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முருகேசன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர் சுமதி மீது கொலை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x