Published : 18 Aug 2019 01:08 PM
Last Updated : 18 Aug 2019 01:08 PM
ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது குறித்து, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து, அலுவலக செலவு போன்றவை உயர்ந்துள்ளதால் பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளது என கூறினார். இதனால் பசும்பால் கொள்முதல் விலை ரூ.4 உயர்ந்து ரூ.32 ஆகிறது. எருமைபால் கொள்முதல் விலை ரூ.6 உயர்ந்து ரூ.41 ஆகிறது. இந்த பால் கொள்முதல் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வால், 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள்.
ஆனால் இதுவே தனியார் பால்விலை ஒரு லிட்டர் ரூ.44, ரூ.46 மற்றும் ரூ.50 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பால் விலையை உயர்த்திய பிறகும், தனியார் விலையை விட குறைவாக தான் இருக்கிறது. தனியார் பால் விலையை விட குறைவாகவே உயர்த்தப்பட்டு இருப்பதால், நுகர்வோருக்கு பணச்சுமை இருக்காது.
ஆவின் பால் விற்பனை விலை மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது, இவ்வாறு கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT