Published : 15 Aug 2019 10:49 AM
Last Updated : 15 Aug 2019 10:49 AM
ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களின் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், ''அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்திய சுதந்திர நாளில் போற்றுவோம். அவர்களின் வழியில் கருத்துரிமை- மனித உரிமை - மாநில உரிமை - ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம்” என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்திய சுதந்திர நாளில் போற்றுவோம்.
— M.K.Stalin (@mkstalin) August 15, 2019
அவர்களின் வழியில் கருத்துரிமை-மனித உரிமை - மாநில உரிமை - ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம்.#HappyIndependenceDay
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT