Published : 15 Aug 2019 09:54 AM
Last Updated : 15 Aug 2019 09:54 AM
சென்னை
மயிலாடுதுறையை தலைமையிட மாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளி யிட்ட அறிக்கையில் அவர் கூறி யிருப்பதாவது: மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண் டும் என்று 1991 முதல் 28 ஆண்டு களாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். 1997-ல் நாகை மாவட்டத்தை பிரித்து திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 2004-ல் மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க கொள்கை அளவில் முடிவெடுத்து அதற்கான நிர்வாக ரீதியிலான பணிகள் தொடங்கப்பட்டன. இது தொடர்பாக நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டப் பேரவையில் பேசினேன். ஆனா லும், மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்கும் பணிகள் முடங்கின.
இந்நிலையில் திருவாரூர், தஞ்சை மாவட்டங்களைப் பிரித்து கும்பகோணத்தை தலைமையிட மாகக் கொண்டு புதிய மாவட் டத்தை உருவாக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. இத னால் மயிலாடுதுறை மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். எனவே அப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகள், 241 ஊராட்சிகள், 288 வருவாய் கிராமங்கள், 9 லட்சத்து 15 ஆயிரம் மக்கள் தொகை உடைய மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT