Published : 15 Aug 2019 08:02 AM
Last Updated : 15 Aug 2019 08:02 AM

45 நாட்களில் 90 லட்சம் பேர் வழிபட்டனர்: பொது தரிசனம் நாளை நிறைவு - இன்று பகல் 12 மணி வரை முக்கிய பிரமுகர்கள் அனுமதி

காஞ்சிபுரம்

அத்திவரதர் தரிசனம் நாளையுடன் நிறைவு பெற உள்ளது. மேலும் ஆடி கருட சேவையை ஒட்டி அத்தி வரதர் பொது தரிசனம் இன்று (ஆகஸ்டு 15) மாலை 4 முதல் இரவு 8 மணிவரை நிறுத்தி வைக்கப்பட உள்ளது. அதேபோல் நண்பகல் 12 மணியுடன் முக்கிய பிரமுகர்கள் தரிசனம் நிறைவு பெறும்.

காஞ்சிபுரம் வரதராஜ பெரு மாள் கோயிலில் நேற்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிறப் பட்டாடை அணிந்து காட்சி அளித்தார். அத்தி வரதரை தரிசிக்க 4 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் காஞ்சி புரத்தில் திரண்டிருந்தனர்.

முக்கிய பிரமுகர்கள், மிக முக் கிய பிரமுகர்களுக்கான அத்திவர தர் தரிசனம் இன்று நண் பகல் 12 மணியுடன் நிறைவடை கிறது. அதேபோல் பொது தரிசனம் நாளை நிறைவடைகிறது. ஆடி கருட சேவையை ஒட்டி இன்று மாலை 4 மணி முதல் 8 மணிவரை அத்திவரதர் தரிசனம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தி யாளர்களிடம் பேசியதாவது:

கடந்த 45 நாட்களில் 89.75 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய் துள்ளனர். இன்று நடைபெறும் ஆடி கருடசேவையையொட்டி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பொது தரிசனம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. இதற்காக நண்பகல் 12 மணிக்கே கிழக்கு கோபுர வாசல் மூடப்படும். கிழக்கு கோபுர வாசலுக்குள் வந்த பொதுமக்கள் மட்டுமே மாலை 4 மணி வரை தரிசனம் செய்ய முடியும்.

இன்று நண்பகல் 12 மணியுடன் முக்கிய பிரமுகர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் தரிசனம் நிறைவு பெறுகிறது. இன்று இரவும், நாளையும் பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும். ஆகஸ்ட் 17-ம் தேதி உரிய ஆகம விதிப்படி பூஜைகள் செய்து அத்திவரதர் அவரது இருப்பிடமான அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுவார். அன்றைய தினம் எந்த தரிசனமும் கிடையாது. மூலவருக்கு உரிய 6 கால பூஜைகள் மட்டும் செய்யப்படும்.

அத்திவரதர் வைபவம் நிறைவு பெற்ற பிறகு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். ஆகஸ்ட் 17-ம் தேதி மூலவர் தரிசனம் உட்பட எந்த தரிசனத்துக்கும் அனுமதி கிடையாது. அத்திவரதர் வைபவம் ஏற்கெனவே முடிவு செய்தபடி 17-ம் தேதி நிறைவு பெறும் என்றார்.

அத்திவரதர் வைபவத்தை நீட் டிப்பது குறித்து அரசு முடிவெடுக் கலாம் என்று நீதிமன்றம் கூறி யுள்ளதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, "ஆகம விதிப்படிதான் எல்லாம் நடைபெறும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

அரசும், மாவட்ட நிர்வாகமும் விழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மட்டுமே செய்து தருகிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x