Published : 14 Aug 2019 01:50 PM
Last Updated : 14 Aug 2019 01:50 PM

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து: விரைவில் நிரம்பும் என எதிர்பார்ப்பு

மேட்டூர் அணை, படம்: என்.பாஸ்கரன்

சேலம்

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால், அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரும் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர், கபிணி உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. ஒகேனக்கலில், இன்று (ஆக.14) காலை நிலவரப்படி விநாடிக்கு 50,000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். அணையில் இருந்து 10,000 கன அடி வீதம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மேலும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது. அணையில் இருந்து 200 மெகாவாட் நீர் மின்சார உற்பத்தியும் தொடங்கப்பட்டுள்ளது.

120 அடியை உச்சபட்ச நீர்த்தேக்க அளவாக கொண்டுள்ள மேட்டூர் அணையின் இப்போதைய நீர்மட்டம் 107.73 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு ஒரு லட்சத்து 11,069 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிவிட்ட நிலையில், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால், மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x