Published : 13 Aug 2019 10:18 AM
Last Updated : 13 Aug 2019 10:18 AM
கடையம்
நெல்லை மாவட்டம் கடையம் அருகே தாக்க முயன்ற 2 கொள்ளையர்களை வீரத்துடன் போராடி வயதான தம்பதியர் விரட்டிய வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
நெல்லை மாவட்டம் கடையம் அருகேயுள்ள கல்யாணிபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகவேலு. இவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் வெளியே நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது கொள்ளையர்கள் இருவர் முகமூடி அணிந்தபடி ஆயுதங்களுடன் அங்கே வந்தனர். கொள்ளையர் ஒருவர் சண்முகத்தின் கழுத்தில் துணியை சுற்றி நெறிக்க முற்பட்டார்.
ஆனால் கொள்ளையரிடம் இருந்து விடுபட போராடிய சண்முகவேலு, கையில் கிடைத்த பொருட்களால் தாக்குதல் நடத்தினார். சத்தம் கேட்டு சண்முகவேலின் மனைவி செந்தாமரை வெளியே ஓடி வந்தார். கணவனுடன் சேர்ந்து கொள்ளையர்களை தாக்கி முற்பட்டார்.
#WATCH Tamil Nadu: An elderly couple fight off two armed robbers who barged into the entrance of their house & tried to strangle the man, in Tirunelveli. The incident took place on the night of August 11. (date and time mentioned on the CCTV footage is incorrect) pic.twitter.com/zsPwduW916
— ANI (@ANI) August 13, 2019
கொள்ளையர்கள் இருவரையும் விரட்ட மட்டுமின்றி மடக்ககிப் பிடிக்கவும் இருவரும் முற்பட்டனர். இதனால் அலறிய முதியவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த காட்சிகள் அனைத்தும் அவர்களது வீட்டில் இருந்து சிசிடி கேமராவில் பதிவாகியது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT