Last Updated : 12 Aug, 2019 05:18 PM

 

Published : 12 Aug 2019 05:18 PM
Last Updated : 12 Aug 2019 05:18 PM

திருக்கோவிலூர் அருகே கோயில் திருவிழாவில் வெடிக்கப்பட்ட ராக்கெட் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

விழுப்புரம்

திருக்கோவிலூர் அருகே கோயில் திருவிழாவில் வெடிக்கப்பட்ட ராக்கெட் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

திருக்கோவிலூர் அருகே ஆளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் தன் சகோதரி கல்பனாவை கோவை மாவட்டம், வால்பாறை பகுதியைச் சேர்ந்த ராஜா என்பருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்கள் சென்னையில் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு மனிஷ் (3) என்ற மகன் இருந்தார்.

கடந்த 10-ம் தேதி ஆளூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்காக கல்பனா தன் மகன் மனிஷ்ஷுடன் வந்தார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கோயில் அருகே வாணவேடிக்கை நடத்தப்பட்டது. அப்போது மேலெழும்பி சென்ற ராக்கெட் மீண்டும் கீழே வந்தபோது தன் மாமா வீட்டு திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனிஷ் தலையில் விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த மனிஷ் உடனடியாக சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மனிஷ் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x