Published : 12 Aug 2019 09:24 AM
Last Updated : 12 Aug 2019 09:24 AM
அத்திவரதரை தரிசனம் செய்ய வரும் முக்கிய நபர்களுக்காக விஐபி மற்றும் விவிஐபி வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழக மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் முக்கிய நபர்கள் வருவதால், மேற்கண்ட வரிசை யும் கூட்ட நெரிசலுடனே காணப் படுகிறது. அதனால், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு 3 வேலை உணவும் சரியான நேரத்துக்கு கிடைப்பதில்லை.
மேலும், உணவு சாப்பிடு வதற்கும் மாற்று காவலர்கள் நியமிக்கப்படுவதில்லை. அத னால், வரிசையின் அருகே நின்ற வாறே உணவு சாப்பிடும் நிலை உள்ளது.
மேலும், விஐபி வரிசை பகுதியில் போலீஸாருக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தாததால் இயற்கை உபாதைகள் கழிக்க பெரும் சிரமப்படுகின்றனர். பெண் காவலர்களின் நிலை மேலும் பரிதாபமானதாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT