Published : 12 Aug 2019 09:26 AM
Last Updated : 12 Aug 2019 09:26 AM
சென்னை
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி மாமல்லபுரத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு:
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 70 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உண்டு உறைவிட நிர்வாக பயிற்சி ஆகஸ்ட் 20-ல் தொடங்கி 22-ம் தேதி வரை 3 நாட்கள் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.
மாநில திட்ட இயக்குநரகமும், அண்ணா மேலாண்மை நிலைய மும் இணைந்து இந்த பயிற்சியை அளிக்க முடிவாகியுள்ளது. எமிஸ் இணையதளம், தகவல் உரிமை சட்ட சிக்கல்கள், நிர்வாகம் உட்பட பல்வேறு அம்சங்களி ல் பயிற்சி அளிக்கப்படும்.
அமைச்சர் ஆய்வு
எனவே, கடிதம் பெற்ற அதி காரிகள் ஆகஸ்ட் 19-ம் தேதி மாலை பயிற்சி அரங்கத்தில் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண் டும். பயிற்சியின் போது மாணவர் சேர்க்கை, பள்ளி கட்டடம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உட் பட விவரங்கள் குறித்து அதி காரி களிடம் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு நடத்த உள்ளார். அதனால் அதற் குரிய ஆவணங்களுடன் தவறாமல் பயிற்சியில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT