Published : 11 Aug 2019 11:14 AM
Last Updated : 11 Aug 2019 11:14 AM
விருதுநகர்
எதையும் பொருட்படுத்தாமல் உண் மையை பேசும் தமிழக அரசியல் தலைவர்களில் வைகோவும் ஒருவர் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் மற்றும் ராஜபாளையத்தில் கால்நடை மருந்தகங்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலூர் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் பெற்றது வெற்றியும் இல்லை, நாங்கள் பெற்றது தோல்வியும் இல்லை. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். அதில், அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றிபெறும்.
வைகோ சில நேரங்களில் தன்னை மறந்து உண்மையை பேசி விடுகிறார். அவர் எந்த கூட்டணியில் இருந்தாலும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டார். வைகோவின் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அவரின் பேச்சுதான் காரணம். மனதில் என்ன படுகிறதோ அதை அப்படியே பேசிவிடுவார். எதையும் பொருட்படுத்தாமல் உண்மையை உடைக்கும் தமிழக அரசியல் தலைவர்களில் வைகோவும் ஒருவர்.
மணிகண்டன் அளித்த பேட்டியால் கட்சிக்குள் இருக்கும் ஒற்றுமை குலைந்து விடுமோ என்ற நோக்கத்தில்தான் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மணிக ண்டனுக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT